ADDED : மே 20, 2026 04:32 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ஏம்பலத்தில் முதியவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஏம்பலம் அய்யனார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தேசிங்கு 76, இவர் கீழே விழுந்ததில் அடிப்பட்டு ஊன்றுகோல் உதவியுடன் நடந்து வந்தார்.
இதனால் விரக்தியடைந்த தேசியங்கு, நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் வீட்டின் பின்பக்கம் உள்ள வேப்பமரத்தில் நைலான் கயிற்றால் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி நீலா கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
