ADDED : ஆக 11, 2026 09:53 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: காலப்பட்டு அருகே வேப்பமரத்தில் முதியவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.உருளையான்பேட்டை மூவேந்தர் நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் 68, ஓய்வு பெற்ற தனியார் மருத்துவமனை ஊழியர். இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு பிள்ளகைள் உள்ளனர். சதீஷ்குமார் சின்னகாலப்பட்டில் உள்ள தங்கச்சி வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அப்பகுதி திடீர் நகர் பகுதியில் உள்ள வேப்பமரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில் காலப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
