ADDED : மே 09, 2025 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பைக் மோதிய விபத்தில், படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடலுார், மஞ்சக்குப்பம், சண்முகம் தெருவை சேர்ந்தவர் சுந்தரம், 65. இவர், கடந்த 7ம் தேதி சொந்த வேலையாக கன்னியக்கோவில் வந்தார். இரவு முள்ளோடை சந்திப்பு அருகே சாலையோரமாக நடந்து சென்றபோது, அவ்வழியே சென்ற ராயல் என்பீல்டு புல்லட் அவர் மீது மோதியது. படுகாயமடைந்த அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.