ADDED : டிச 24, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: சாலையில் மயங்கி விழுந்து இறந்த முதியவர் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரியாங்குப்பம் பி.சி.பி., நகரை சேர்ந்தவர், சீனுவாசன், 50. இவர் நோணாங்குப்பம் சாலையில், நேற்று முன்தினம் மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.
புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.