/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மயங்கி விழுந்து முதியவர் சாவு
/
மயங்கி விழுந்து முதியவர் சாவு
ADDED : பிப் 25, 2026 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம், திருமால் நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 60; தையல் மெஷின் மெக்கானிக். சளி பிரச்னையால் அவதிப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வெளியில் சென்று விட்டு, வீட்டுக்கு தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். மணவெளி ரோட்டில் சென்றபோது, மயங்கி விழுந்தார்.
அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

