ADDED : ஆக 11, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி கோவிந்தசாலை பகுதியை சேர்ந்தவர் காந்திமதி 73; வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவர் கடந்த மாதம் 24ம் தேதி பூஜை அறையில் விளக்கு ஏற்றிய போது, அவரது புடவையில் தீ பற்றி எரிந்துள்ளது.
இதில், படுகாயமடைந்த அவர் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், காந்திமதி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.