ADDED : டிச 20, 2024 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: வீட்டில், வழுக்கி கீழே விழுந்து காயமடைந்த மூதாட்டி, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையம் புதுநகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி கல்யாணி, 64, இவர் கடந்த 10ம் தேதி, வீட்டு தரையில் வழுக்கி விழுந்தார். படு காயமடைந்த அவரை, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இறந்தார். புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.