தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாக்காளர்களின் மொபைல் போனை பத்திரமா திருப்பி கொடுத்த தேர்தல்துறை

 வாக்காளர்களின் மொபைல் போனை பத்திரமா திருப்பி கொடுத்த தேர்தல்துறை

 வாக்காளர்களின் மொபைல் போனை பத்திரமா திருப்பி கொடுத்த தேர்தல்துறை


ADDED : ஏப் 10, 2026 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2026 03:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மொபைல்போனுடன் ஓட்டுச்சாவடிக்குள் வந்த வாக்காளர்கள் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

புதுச்சேரி சட்டசபைத் தேர்தல் என்றாலே திருவிழா கோலம்தான். ஆனால், இந்த முறை ஓட்டுச்சாவடிக்குள் நுழைய முயன்ற வாக்காளர்களுக்கு ஒரு சிறிய செக் வைக்கப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, பாதுகாப்பு காரணங்களுக்காக தேர்தல் அதிகாரிகள் தவிர மற்ற யாரும் ஓட்டுச்சாவடிக்குள் மொபைல் போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இது குறித்து முன்னரே அறிவிப்புகள் வெளியானாலும், பழக்கதோஷத்தில் பலரும் பாக்கெட்டிலும் கைகளிலும் மொபைல்போன்களுடன் வந்து விட்டனர். ஓட்டுச்சாவடி நுழைவாயிலிலேயே நின்றிருந்த பாதுகாப்புப் படையினர், மொபைல்போனை இங்கே கொண்டு போகக் கூடாது என்று கறாராகச் சொல்ல, வாக்காளர்கள் சற்றுத் திகைத்துப் போயினர்.

வாக்காளர்களின் சிரமத்தைப் புரிந்துகொண்ட தேர்தல் துறை, வாசலிலேயே ஒரு சூப்பர் ஏற்பாட்டைச் செய்திருந்தது.

மொபைல் போன்களுடன் வந்தவர்கள் அங்கிருந்த தன்னார்வலர்களிடம் அனுப்பப்பட்டனர். வாக்காளர்கள் தங்கள் போன்களை அவர்களிடம் ஒப்படைக்க, அதற்கு ஈடாக ஒரு டோக்கன் வழங்கப்பட்டது.

ஓட்டுப் போட்டுட்டு வாங்க... பத்திரமா போனை வைத்திருந்து தர்றோம் எனத் தன்னார்வலர்கள் இன்முகத்துடன் போன்களைப் பராமரித்தனர்.

ஜனநாயகக் கடமையை முடித்துவிட்டு வந்த வாக்காளர்கள், தங்களது டோக்கனை கொடுத்து, மொபைல் போன்களைத் திரும்பப் பெற்றுச் சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us