sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மின்துறை ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் தேர்வு

/

மின்துறை ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் தேர்வு

மின்துறை ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் தேர்வு

மின்துறை ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் தேர்வு


ADDED : ஏப் 02, 2025 06:18 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 06:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மின்துறை ஊழியர்கள் கூட்டுறவு கடன் வழங்கும் சங்க நிர்வாகிகள் தேர்தலில் 4வது முறையாக ஐ.டி.ஐ., நலச்சங்கம் வெற்றி பெற்றுள்ளது.

புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் கூட்டுறவு கடன் வழங்கும் சங்கத்திற்கான 2025-28ம் ஆண்டிற்கான இயக்குனர் குழு தேர்தல் கடந்த 23ம் தேதி நடந்தது.

இதில் மின்துறை ஐ.டி.ஐ., நலச்சங்கம், பில் கலெக்டர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் போட்டியிட்டன. கூட்டுறவு கடன் வழங்கும் சங்க உறுப்பினர்கள் 1130 பேர் பங்கேற்று ஓட்டு அளித்தனர்.

தேர்தலில், ஐ.டி.ஐ., நலச்சங்கம் தொடர்ந்து, 4வது முறையாக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து, வெற்றி பெற்ற இயக்குனர்கள் ஆலோசனைக் கூட்டம் மின்துறை தலைமை அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்தில், சங்கத்தின் புதிய தலைவராக தேவகுமார், துணைத் தலைவராக செல்வம், பொருளாளராக பாலச்சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு முன்னாள் நீதிபதி அசோகன் வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து, சுகாதாரத்துறை துணை இயக்குனர் சுரேஷ் உள்ளிட்ட மின்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us