ADDED : மார் 17, 2026 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: தனியார் கம்பெனி ஒப்பந்த ஊழியர் கழுத்தில் கயிறு இறுக்கி பரிதாபமாக இறந்தார்.
நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கம் நத்தமேட்டை சேர்ந்தவர் சக்கரவத்தி, 52; தனியார் கம்பெனி ஒப்பந்த ஊழியர். இவர் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை அதிகமாக மது குடித்த சக்கரவத்தி, அவர் கழுத்தி இருந்த சாமி கயிற்றால் சுவற்றில் இருந்த ஆணியில் மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

