/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு ஐ.டி.ஐ.,யில் வேலைவாய்ப்பு முகாம்
/
அரசு ஐ.டி.ஐ.,யில் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : மார் 03, 2026 04:12 AM

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
டி.என்.எஸ், இந்தியா அறக்கட்டளை மற்றும் லெனோவா இந்தியா இணைந்து சீடூ ஐசீ திட்டத்தின் கீழ் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்து வருகிறது. அதன்படி நெட்டப்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் செல்லையா தலைமை தாங்கினார். லெனோவா இந்தியா உற்பத்தி இயக்குனர் ஸ்ரீகாந்த் தன்சிரூர், லெனோவா ஆசியா பசிபிக் கார்ப்பரேட் குடியுரிமை தலைவர் பிரதிமாஹரீட், டி.என். எஸ். இந்தியா அறக்கட்டளை இணை இயக்குனர் கீர்த்தி சதுர்வேதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் 70 அரசு தொழில் பயிற்சி நிலைய மாணவர்களுக்கு 12 வாரங்கள் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

