sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரும்பார்த்தபுரம்-நுாறடிச்சாலை பைபாசில் ஆக்கிரமிப்பு துவக்கம்

/

அரும்பார்த்தபுரம்-நுாறடிச்சாலை பைபாசில் ஆக்கிரமிப்பு துவக்கம்

அரும்பார்த்தபுரம்-நுாறடிச்சாலை பைபாசில் ஆக்கிரமிப்பு துவக்கம்

அரும்பார்த்தபுரம்-நுாறடிச்சாலை பைபாசில் ஆக்கிரமிப்பு துவக்கம்


ADDED : பிப் 03, 2025 06:15 AM

Google News

ADDED : பிப் 03, 2025 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அரும்பார்த்தபுரம் - நுாறடிச்சாலை இணைக்கும் புதிய பைபாசில், அதற்குள் சிலர் ஆக்கிரமிப்பு செய்ய துவங்கியுள்ளனர்.

புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், அரும்பார்த்தபுரம் முதல் இந்திரா காந்தி சிக்னல் வரையிலான சாலை அகலப்படுத்தப்படாததால், தினமும் காலை, மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இதை தவிர்க்கும் வகையில், அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலத்திலிருந்து புதுச்சேரி நுாறடிச்சாலையை இணைக்கும் வகையில் 4.5 கி.மீ., துாரத்திற்கு, புதிய புறவழிச்சாலை (பைபாஸ்) ரூ. 30 கோடி செலவில் அமைக்கும் பணி நடந்து, புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 95 சதவீத பணிகள் முடிந்துள்ளதால், தற்போது அதில் வாகன போக்குவரத்து துவங்கியுள்ளது. இந்நிலையில், நுாறடிச்சாலையில் இருந்து அரும்பார்த்தபுரம் செல்லும் புறவழிச்சாலையின் பணிகள் முழுமை பெறாத நிலையில், தற்போது சிலர், சாலையோரங்களில் ஜல்லி, மணல், மண் உள்ளிட்டவைகளைகொட்டி ஆக்கிரமித்து இடம் பிடிக்க துவங்கியுள்ளனர்.

இந்நிலை தொடர்ந்தால், வரும் காலங்களில் அங்கு சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாத சூழல் ஏற்படும். எனவே, நுாறடிச்சாலை- அரும்பார்த்தபுரம் சாலையோர ஆக்கிரமிப்புகளை ஆரம்பத்திலேயே அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us