/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி நிறைவு
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி நிறைவு
ADDED : ஏப் 11, 2025 04:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வில்லியனுார், தட்டாஞ்சாவடி அரசு தொடக்கப் பள்ளியில் திக் ஷா பவுண்டேஷன், இ.எல்.எப்., சார்பில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் நடந்து வந்தது.
அதன் நிறைவு விழா, தலைமை ஆசிரியர் லட்சுமணன் தலைமையில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் குலசேகரன், பள்ளி துணை ஆய்வாளர் திருவரசன் ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களின் ஆங்கில திறனை ஆய்வு செய்து, பரிசுகள் வழங்கினர்.
விழாவில், ஆசிரியர்கள் மைவிழி, கனிமொழி, அலென்மேரி, மாலினி பொன்தேவி, பாரதிரோஜா, மீனாட்சி மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.