sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

எம்.எல்.ஏ.,வை மிரட்டிய ரவுடி கோர்ட்டில் இருந்து 'எஸ்கேப்' ; கோட்டை விட்ட போலீஸ்

/

எம்.எல்.ஏ.,வை மிரட்டிய ரவுடி கோர்ட்டில் இருந்து 'எஸ்கேப்' ; கோட்டை விட்ட போலீஸ்

எம்.எல்.ஏ.,வை மிரட்டிய ரவுடி கோர்ட்டில் இருந்து 'எஸ்கேப்' ; கோட்டை விட்ட போலீஸ்

எம்.எல்.ஏ.,வை மிரட்டிய ரவுடி கோர்ட்டில் இருந்து 'எஸ்கேப்' ; கோட்டை விட்ட போலீஸ்


ADDED : நவ 13, 2024 05:35 AM

Google News

ADDED : நவ 13, 2024 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : எம்.எல்.ஏ.,வை மிரட்டிய வழக்கில் நீதிமன்றத்தில் சரண் அடைய வந்த ரவுடி ராமு, ஜாமின் கிடைக்காது என தெரிந்ததும் நீதிமன்றத்தில் இருந்து தப்பினர்.

புதுச்சேரி உழவர்கரை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ., சிவசங்கரன். இவர், புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சேர்மன் பதவி வகித்து வருகிறார். ஜிப்மர் எதிரில் உள்ள உழவர்கரை நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில், திலாஸ்பேட்டை ரவுடி ராமு சில கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

இவரது கடைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தையும் தாண்டி ஆக்கிரமித்து கடை நடத்துவதால் மற்ற வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக, சிவசங்கரன் எம்.எல்.ஏ.விடம் வியாபாரிகள் புகார் தெரிவித்தனர். சிவசங்கரன் எம்.எல்.ஏ., உழவர்கரை நகராட்சி ஆணையர் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார்.

இதை அறிந்த ரவுடி ராமு, சிவசங்கர் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு நேரடியாக சென்று, ஜிப்மர் கடை விவகாரத்தில் தலையிட கூடாது என மிரட்டல் விடுத்து சென்றார். இது தொடர்பாக எம்.எல்.ஏ., அளித்த புகாரின்பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் ரவுடி ராமு மீது மிரட்டல் வழக்கு பதிவு செய்தனர். ரவுடி ராமுவை கைது செய்ய வியாபாரிகள் சங்கங்கள் ஊர்வலமாக சென்று கவர்னர், முதல்வர், உள்துறை அமைச்சர், டி.ஜி.பி., உள்ளிட்டோரிடம் மனு அளித்தனர்.

இதை அறிந்த ரவுடி ராமு, நேற்று மதியம் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரண் அடைய வந்தார். சரண் அடைந்து உடனடியாக நீதிமன்றம் மூலம் ஜாமின் பெற மனு தாக்கல் செய்தார்.

அப்போது, எம்.எல்.ஏ., வை மிரட்டிய வழக்கு என்பதால் ஜாமின் தர முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ரவுடி ராமு நீதிமன்றத்தில் இருந்து தப்பினார்.

நீதிமன்றத்தில் அவரை கைது செய்ய காத்திருந்த போலீசார், ஏமாற்றத்துடன் திரும்பினர்.






      Dinamalar
      Follow us