புதுச்சேரி காரைக்காலில் 27ம் தேதி இ.எஸ்.ஐ., முகாம்
புதுச்சேரி காரைக்காலில் 27ம் தேதி இ.எஸ்.ஐ., முகாம்
ADDED : மார் 23, 2026 08:24 PM
புதுச்சேரி: தொழிலாளர் காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ) சார்பில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் குறை தீர்ப்பு முகாம் வரும் 27ம் தேதி நடக்கிறது.
தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் புதுச்சேரி மண்டல அலுவலக செய்திகுறிப்பு:
தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழகம் (இ.எஸ்.ஐ) மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் ( இ.பி.எப்.ஒ) ஒருங்கிணைந்து விழிப்புணர்வு மற்றும் குறை தீர்ப்பு முகாம் வரும் 27ம் தேதி நடக்கிறது. புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள தி சென்னை சில்க்ஸ் இடத்திலும், காரைக்கால் பஜார், பாரதி நகரில் உள்ள வித்யோதயா உயர்நிலைப்பள்ளியில் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது.
எனவே தொழிலாளர்கள், பயனாளிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் தங்கள் இ.எஸ்.ஐ., மற்றும் இ.பி.எப்.ஓ., தொடர்பான கோரிக்கைகளை முகாமில் தெரிவிக்கலாம். கோரிக்கைகளை உடனடியாக பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
