sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரி பா.ஜ.,வில் உச்சகட்ட குழப்பம் மேலிட பார்வையாளர் நாளை வருகை

/

புதுச்சேரி பா.ஜ.,வில் உச்சகட்ட குழப்பம் மேலிட பார்வையாளர் நாளை வருகை

புதுச்சேரி பா.ஜ.,வில் உச்சகட்ட குழப்பம் மேலிட பார்வையாளர் நாளை வருகை

புதுச்சேரி பா.ஜ.,வில் உச்சகட்ட குழப்பம் மேலிட பார்வையாளர் நாளை வருகை


ADDED : நவ 26, 2024 05:54 AM

Google News

ADDED : நவ 26, 2024 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பா.ஜ.,வில் ஏற்பட்டுள்ள உச்சகட்ட குழப்பத்தை தொடர்ந்து மேலிட பார்வையாளர் நாளை புதுச்சேரி வருகிறார்.

புதுச்சேரி அமைச்சரவையில் அங்கம் வகித்துள்ள பா.ஜ.,வை சேர்ந்த சாய் சரவணன்குமார் வசமிருந்த முக்கிய இலாகாக்கள் பறிக்கப்பட்டது. இதனால், அதிருப்தியடைந்த அவர், இழந்த பதவியை பெற்றுத் தர வேண்டி கவர்னிடம் மனு அளித்துள்ளதோடு, அமைச்சரவையில் தனக்கு கடைசி இடம் தானா? என போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

இந்நிலையில் பா.ஜ., மற்றும் பா.ஜ., ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சுழற்சி முறையில் அமைச்சர் பதவி பெறவும், வாரிய தலைவர் பதவிக்கும் பல்வேறு வகையில் முயன்றனர். அதில் பலனளிக்காததால், விரக்தியடைந்த அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், லாட்டரி அதிபர் மார்ட்டினை முன்னிறுத்தி தனி அணியாக அரசியல் களம் காண்பதற்கான பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால், பா.ஜ.,வில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்னைகளுக்கு, சுமூக தீர்வு கண்டு, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக கட்சியின் மேலிட பொறுப்பாளரான நிர்மல் குமார் சுரானா நாளை புதுச்சேரி வருகிறார்.






      Dinamalar
      Follow us