sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சனீஸ்வரர் கோவில் பெயரில் போலி இணையதள மோசடி

/

சனீஸ்வரர் கோவில் பெயரில் போலி இணையதள மோசடி

சனீஸ்வரர் கோவில் பெயரில் போலி இணையதள மோசடி

சனீஸ்வரர் கோவில் பெயரில் போலி இணையதள மோசடி


ADDED : பிப் 09, 2025 11:56 PM

Google News

ADDED : பிப் 09, 2025 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்; திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் பெயரில் போலி இணையதளம் துவக்கி, பக்தர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி பகவானுக்கு தனி சன்னிதி உள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா, இங்கு விமரிசையாக நடைபெறும்.

சில ஆண்டுகளாக கோவில் தேவஸ்தானம் பெயரில், ஆன்லைனில் போலி இணையதளம் துவங்கி, சனீஸ்வர பகவான் புகைப்படத்துடன் தரிசனம், அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் பிரசாதம் வழங்கி, குறிப்பிட்ட தொகையை சிலர், பல ஆண்டுகளாக பல லட்சம் ரூபாய் வசூலித்து வந்துள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து, கோவில் நிர்வாகத்திடம் பக்தர்கள் புகார் அளித்தனர். கோவில் நிர்வாகம், காரைக்கால் சீனியர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. கோவில் ஊழியர்கள் சிலர் உதவியுடன், இந்த மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. காரைக்கால் மாவட்ட போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன், பரிகார பூஜை செய்வதாக கூறி, வெளிநாட்டினரை ஏமாற்றி பணம் பறித்த கோவில் ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பக்தர்களுக்கு கோவில் பிரசாதம் அனுப்புவதாக, போலி வெப்சைட் துவங்கி, பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.






      Dinamalar
      Follow us