/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளிக்கு மின்விசிறி வழங்கல்
/
அரசு பள்ளிக்கு மின்விசிறி வழங்கல்
ADDED : பிப் 17, 2025 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; மடுகரை ராமமூர்த்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எழுது பொருட்கள் மற்றும் பள்ளிக்கு இலவச மின்விசிறி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் தமிழ் ஆசிரியை புனிதா வரவேற்றார். தலைமையாசிரியர் ஞானசம்பந்தம் தலைமை தாங்கி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கி வாழ்த்தினார்.
அரிகிருஷ்ணன் பள்ளிக்கு 5 மின்விசிறிகள் இலவசமாக வழங்கினார். நிகழ்ச்சியில், பாண்டுரங்கன், மணிவண்ணன், ஜெயபிரகாஷ், பாலசுப்பரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆசிரியை புண்ணியவதி நன்றி கூறினார்.

