sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம்; காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் வேதனை

/

அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம்; காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் வேதனை

அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம்; காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் வேதனை

அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம்; காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் வேதனை


ADDED : மார் 31, 2025 07:36 AM

Google News

ADDED : மார் 31, 2025 07:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார் : கூனிச்சம்பட்டில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதால், விவசாயிகள் வேதனைக்கு அடைந்து வருகின்றனர்.

திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு, பி.எஸ்.பாளையம், மண்ணாடிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தங்களது விவசாய நிலங்களில் நெல், கரும்பு உள்ளிட்டவைகளை பயிர் செய்து வருகின்றனர்.

இந்தபகுதிகளில் உள்ள ஆறு மற்றும் ஏரிப்பகுதியில் சுற்றித்திரிந்து வரும் காட்டுப் பன்றிகள் விவசாயிகள் பயிரிட்டு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள விளை நிலங்களுக்கு இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக வந்து, அனைத்து பயிர்களையும் சேதப்படுத்தி விட்டு சென்று விடுகின்றன.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே, காட்டு பன்றிகளின் நடமாட்டத்தை தடுக்க விவசாயிகள், இரவு நேரங்களில் ஒலி பெருக்கிகள் மூலம் பல்வேறு விலங்குகளின் குரலில் சத்தம் எழுப்பியும், வெடிகள் வெடித்தும் வருகின்றனர். இருப்பினும், காட்டுபன்றிகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனால், விவசாயிகள் தற்போது செய்வது அறியாமல் திகைத்து வருகின்றனர்.

எனவே, காட்டுபன்றிகளை விரட்டவும், வனவிலங்குகள் மூலம் சேதப்படுத்தப்படும் விவசாய நிலங்களை, அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us