sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காட்டுப்பன்றியால் விவசாயிகள் அவதி

/

காட்டுப்பன்றியால் விவசாயிகள் அவதி

காட்டுப்பன்றியால் விவசாயிகள் அவதி

காட்டுப்பன்றியால் விவசாயிகள் அவதி


ADDED : நவ 01, 2024 05:31 AM

Google News

ADDED : நவ 01, 2024 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுாரில் விவசாய பயிர்களை காட்டுப்பன்றிகள் கூட்டம் சேதப்படுத்தி வருவதால், விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார், வீராணம், நெட்டப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தங்களது விவசாய நிலங்களில் நெல், கரும்பு, மரவள்ளி கிழங்கு உள்ளிட்டவைகளை பயிர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டுப் பன்றிகள் இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக வந்து,விளை நிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி செல்கின்றன.

இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

இதையடுத்து விவசாயிகள் காட்டு பன்றிகளை விரட்ட இரவு நேரங்களில் ஒலி பெருக்கி மற்றும் வெடி வெடித்து துரத்தி, பயிர்களை பாதுகாத்து வருகின்றனர்.

எனவே பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us