ADDED : நவ 26, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
லாஸ்பேட்டை, நாவற்குளம், அகத்தியர் நகரைச் சேர்ந்தவர் முகமது யூசுப். மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் அஜிபா, 17; லாஸ்பேட்டை தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். வழக்கம்போல் கடந்த 24ம் தேதி இரவு அஜிபா துாங்கி கொண்டிருந்தார். நேற்று காலை பார்த்தபோது, அஜிபா மாயமானார்.
பல இடங்களிலும் தேடியும் கிடைக்காததால் லாஸ்பேட்டை போலீஸ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறது.