ADDED : ஜூன் 10, 2025 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கடைக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
திருக்காஞ்சி ரமணா நகரைச் சேர்ந்தவர் ஜெயப்பிரியா 19, இவர் பிளஸ் 2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவர் கடந்த 6ம் தேதி இரவு பால் பாக்கெட் வாங்க கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இதுவரை வீட்டிற்கு வரவில்லை. இவரை உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கலிவரதன் கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.