ADDED : ஜூலை 22, 2025 08:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மரக்காணம் அனுமந்தையை சேர்ந்தவர் முத்து, இவரது இளைய மகள் ஷிவானி, 22, இவர் எம்.எஸ்சி., முடித்து விட்டு வீட்டில் இருந்தார். இவர் ஒரு பையனை காதலித்ததால், பெற்றோர் தனது மகளை புதுச்சேரி, முத்தியால்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்தனர்.
இந்நிலையில், அங்கு இருந்த அவர் நேற்று முன்தினம் காணாமல் போனார். உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.