தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்


ADDED : செப் 07, 2026 10:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2026 10:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 : புதுச்சேரி: விடுதியில் தங்கியிருந்த மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்தார். 

காரைக்கால் நெடுங்காடு நல்லாத்துார் பகுதியை சேர்ந்தவர் குமணன், 47; இவது மகள் ஸ்ரீநிதி, 19; இவர் லாஸ்பேட்டையில் உள்ள அரசு பொறியல் கல்லுாரியில் 3ம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வருகிறார்.

அப்பகுதியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி படித்து வரும் இவர், வார விடுமுறை நாட்களில் வீட்டுக்கு செல்வது வழக்கம்.

கடந்த 23ம் தேதி வீட்டில் இருந்து கிளம்பி விடுதிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். அவரது மொபைலில் பெற்றோர் தொடர்பு கொண்ட போது, சுவிட்ஸ் ஆப் செய்யப்பட்டிருந்தது. விடுதி நிர்வாகத்தினரிடம் கேட்ட போது, கண்ணுக்கு மருந்துவ சிகிச்சை பெற வீட்டுக்கு செல்வதாக விடுதியில் லீடு போட்டு விட்டு, கடந்த 31ம் தேதி சென்றார்.

அவர் வீட்டுக்கு வராததால், உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து, புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us