/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிமிக்கி கொடுக்கும் நிறுவனங்களுக்கு நிதித்துறை செக்! 15ம் தேதிக்குள் இணக்க அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
/
டிமிக்கி கொடுக்கும் நிறுவனங்களுக்கு நிதித்துறை செக்! 15ம் தேதிக்குள் இணக்க அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
டிமிக்கி கொடுக்கும் நிறுவனங்களுக்கு நிதித்துறை செக்! 15ம் தேதிக்குள் இணக்க அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
டிமிக்கி கொடுக்கும் நிறுவனங்களுக்கு நிதித்துறை செக்! 15ம் தேதிக்குள் இணக்க அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
ADDED : ஏப் 07, 2025 06:09 AM

புதுச்சேரி; பல ஆண்டுகளாக கணக்குகளை சரிக்கட்டாமல் டிமிக்கு கொடுத்து வரும் தன்னாட்சி, சார்பு நிறுவனங்களுக்கு நிதித்துறை செக் வைத்துள்ளது.
மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை குழு, இந்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் அரசு நிதி உதவியை பெறும் அமைப்பு களின் வரவு செலவுக் கணக்கை சரிபார்க்க இந்திய அரசியலமைப்பின் கீழ் நிறுவப்பட்ட அதிகார மிக்க அமைப்பாகும். இந்த அமைப்பு, ஜனாதிபதியின் நேரடி பார்வையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
அரசுடமையாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் வெளித் தணிக்கையாளராகவும் இக்குழு செயல்படுகிறது. கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கைகள் பார்லிமெண்ட், மாநில சட்டசபையின் சிறப்புக் குழுக்களான பொது கணக்குக் குழுக்களால் ஆய்வு செய்யப்படுகின்றன.
ஆனால், புதுச்சேரியில் இந்த அதிகாரமிக்க அமைப்பு தணிக்கைக்கும் ஆய்வுக்கும் வரும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.
பல அரசு துறைகள், தன்னாட்சி அமைப்புகள், சார்பு நிறுவனங்கள் முறையாக கணக்குகளை சமர்பிப்பதில்லை. எங்களுடைய காலத்தில் இது நடக்கவில்லை.
அந்த நேரத்தில் இருந்த அதிகாரி மாற்றலாகிவிட்டார் என, சப்பை காரணங்களை கூறி கணக்குகளை சமர்ப்பிக்க மறுக்கின்றன.
பலமுறை சொல்லி பார்த்த புதுச்சேரி அரசு, தற்போது நிதி துறை வாயிலாக அதிரடியாக செக் வைத்துள்ளது.
வரும் 15ம் தேதிக்குள் கணக்கு வழக்கின் இணைக்க அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2022-23 வரை நிலுவையில் உள்ள 70 தன்னாட்சி மற்றும் அரசு நிறுவனங்களில் 68 நிறுவனங்களின் ஆண்டுக் கணக்குகள் தணிக்கையால் பெறப்படவில்லை. 18 அமைப்புகளில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கணக்கு நிலுவையில் உள்ளது.
வழங்கப்பட்ட நிதி உதவி தொடர்பான தகவல்களை தணிக்கைக்கு வழங்குமாறு துறைகளுக்கு அறிவுறுத்தப்படலாம்.
மேலும் மானியம் பெறும் நிறுவனங்கள் தங்களது கணக்குகளை சரியான நேரத்தில் தணிக்கைக்கு சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படலாம்.
எனவே, நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துகள், நலச் சங்கங்கள், மத நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், சங்கங்கள் போன்ற அமைப்புகள், அதிகாரிகள், நிறுவ னங்களுக்கு மானியங்களைப் பெறும் அனைத்துத் துறைத் தலைவர்களும் தணிக்கைக்கு உடனடியாக வழங்கப்படும் நிதி உதவி தொடர்பாக கோரப்பட்ட தகவல்களை வழங்க வேண்டும்.
மேலும், தணிக்கைக்கு கணக்குகளைச் சமர்ப்பிப் பது கட்டாயமானது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சமர்ப்பிக்காதது எந்தக் காரணத்தாலும் ஏற்கப்படாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள் உடனடி விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மானிய நிறுவனங்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்குவதற்கும், இனிமேல் தாமதமின்றி கணக்குகளை சரியான நேரத்தில் தணிக்கைக்கு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.
இது தொடர்பான இணக்க அறிக்கை வரும் 15ம் தேதி அல்லது அதற்கு முன் நிதித் துறைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு நிதித் துறை உத்தரவிட்டுள்ளது.
நிதித் துறையின் அதிரடியை தொடர்ந்து, அரசு துறைகள் அனைத்தும் தங்களது கீழ் உள்ள அரசு மானியம் பெறும் தன்னாட்சி நிறுவனங்களுக்கு விரைவில் கிடுக்கிபிடி உத்தரவினை பிறப்பிக்க தயாராகி வருகின்றன.