/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிப்பு
/
இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிப்பு
ADDED : ஏப் 01, 2026 04:43 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு விதிகளை மீறி இறைச்சி விற்பனை செய்த 10 கடைகளுக்கு தலா ரூ. 7 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் விற்பனை நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதுச்சேரி நகராட்சி சுகாதார அதிகாரி ஆர்த்தி தலைமையில் நகராட்சி அதிகாரிகள் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தடையை மீறி திறந்து வைக்கப்பட்டிருந்த 10 இறைச்சி கடைகளுக்கு தலா 7 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

