நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : போகிப்பண்டிகை முன்னிட்டு, பண்டசோழநல்லுார் முத்தலாம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நாளை நடக்கிறது.
பண்டசோழநல்லுார் கிராமத்தில் பிரசித்திபெற்ற முத்தாலம்மன் கோவில் உள்ளது. இக்கோவலில் போகிப்பண்டிகை தோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளை 14ம் தேதி போகிப்பண்டிகை முன்னிட்டு இக்கோவிலில் அதிகாலை 5.00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. தீமிதி திருவிழாவில் பண்டசோழநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களம் மற்றும் பொதுமக்கள் வேண்டிக் கொண்டு தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர்.