/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா
/
அரசு கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா
ADDED : செப் 18, 2025 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்:தவளக்குப்பம், ராஜிவ்காந்தி அரசு கல்லுாரியில், 2025-26ம் கல்வியாண்டின், முதலாமாண்டு, மாணவர்களுக்கான, கல்லுாரி துவக்க நாள் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், ஆங்கில துறைத் தலைவர் அருளரசி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) ஹென்னா மோனிஷா தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாணவிகள், ஹேம வர்ஷினி, நந்தினி ஆகியோர் நிகழ்ச்சியை, தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் செல்வராஜ் நன்றி கூறினார்.