நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால், கோட்டுச்சேரி, கீழகாசாகுடி சுனாமி நகரை சேர்ந்தவர் நாகராஜ் மகன் வீரவசந்த், 29; மீனனர்.
நேற்று முன்தினம் இரவு தனது நண்பரின் பைக்கை வாங்கிகொண்டு, காரைக்கால்மேடு சிங்காரவேலர் சிலை அருகில் சென்றபோது, திடீரென சாலையை கடந்து சென்ற பசுங்கன்றின் மீது மோதியது. படுகாயமடைந்த வீரவசந்த், அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பசுங்கன்றும் இறந்தது. நகர போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

