sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கக்கோரி மீனவர்கள் சட்டசபை நோக்கி பேரணி

/

இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கக்கோரி மீனவர்கள் சட்டசபை நோக்கி பேரணி

இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கக்கோரி மீனவர்கள் சட்டசபை நோக்கி பேரணி

இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கக்கோரி மீனவர்கள் சட்டசபை நோக்கி பேரணி


ADDED : மார் 02, 2024 06:17 AM

Google News

ADDED : மார் 02, 2024 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் மீனவர்களுக்கான இட ஒதுக்கீட்டை இரண்டு சதவீதத்திலிருந்து பத்து சதவீதமாக உயர்த்த கோரி சட்டசபை நோக்கி பேரணியாக வந்து முதல்வரிடம் மனு அளித்தனர்.

புதுச்சேரி மீனவர்களுக்கான இ.பி.சி., இட ஒதுக்கீட்டை 2 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்த கோரி மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 21ம் தேதி உலக மீனவர் தினத்தன்று கனகசெட்டிக்குளம் முதல் மூர்த்திக்குப்பம் வரை பைக் பேரணி நடத்தினர்.

இரண்டாம் கட்டமாக கடந்த 7ம் தேதி சிங்கார வேலர் சிலை அருகில் பொதுக்கூட்டம் நடத்தினர். இருப்பினும் கோரிக்கையை நிறைவேற்ற வில்லை.

இந்த நிலையில் மூன்றாம் கட்டமாக நேற்று மீனவர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை இரண்டு சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்த வலியுறுத்தி சட்டசபை நோக்கி பேரணியாக மாதாகோயில் அருகே வந்தடைந்தது.

அங்கு தடுப்பு கட்டை அமைத்து பேரணியை போலீசார் தடுத்தனர்.

இதனையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கேயே கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இறுதியில் முக்கிய நிர்வாகிகள் சட்டசபை சென்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்தார்.

மீனவர்கள் இட ஒதுக்கீடுமுதல்வர் அதிரடி

மீனவர்களிடம் மனுவினை பெற்றுக்கொண்ட முதல்வர் ரங்கசாமி சட்டத்துறை செயலர், பிற்படுத்தப்பட்டோர் ஆணைய செயலரை சட்டசபைக்கு வரவழைத்தார்.மீனவர்களின் கோரிக்கை தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதனை கண்ட மீனவர்கள் முதல்வருக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us