sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

துாண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர் காங்., கண்டன ஆர்ப்பாட்டம்

/

துாண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர் காங்., கண்டன ஆர்ப்பாட்டம்

துாண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர் காங்., கண்டன ஆர்ப்பாட்டம்

துாண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர் காங்., கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 17, 2024 11:23 PM

Google News

ADDED : பிப் 17, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: கடல் அரிப்பை தடுக்க துாண்டில் வளைவு முறையில் கருங்கற்கள் கொட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி மீனவர் காங்., சார்பில், அரியாங்குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்., தேசிய மீனவரணி செயலாளர் காங்கேயன் தலைமை தாங்கினார்.

தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், புதுச்சேரி கடற்கரை மீனவர் பகுதியில் கடற் சீற்றத்தால், வீடுகள், படகுகள் சேதமடைவதால், மீனவர்கள் பாதிக்கின்றனர். எனவே கடல் அரிப்பை தடுக்க, துாண்டில் வளைவு முறையில் கருங்கற்கள் கொட்ட வேண்டும்.

அரியாங்குப்பம் ஆற்றை துார் வார வேண்டும். மீனவர்களை, பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில், காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினர். முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் எம்.எல்.ஏ., கங்காதரன், மாநில பொதுச் செயலாளர் சங்கர், வட்டார காங்., தலைவர் அய்யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us