ADDED : பிப் 16, 2026 06:55 AM

அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மகோற்சவ விழாவையொட்டி, கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியை தொடர்ந்து, இன்று (16ம் தேதி) முதல் வரும் 21ம் தேதி வரை, அம்மன் வீதியுலா மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து 22ம் தேதி, ரணகளிப்பு நிகழ்ச்சியும், முக்கிய நிகழ்வான 23ம் தேதி 5:30 மணியளவில் தேரோட்டம் மற்றும் மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடக்கிறது. 24ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.
