ADDED : பிப் 15, 2025 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிர் தியாகம் செய்த 40 துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அண்ணா சிலை அருகே நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

