sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பறக்கும் இலவம் பஞ்சு: பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்

/

பறக்கும் இலவம் பஞ்சு: பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்

பறக்கும் இலவம் பஞ்சு: பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்

பறக்கும் இலவம் பஞ்சு: பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : ஏப் 10, 2025 04:28 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 04:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அரசுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் முற்றிய நிலையில் உள்ள இலவம் பஞ்சு காய்களை ஏலம் விட்டால் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.

புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் அரசுக்கு சொந்தமான இடங்களில் இலவம் மரங்கள் உள்ளன. இம் மரத்தில் உள்ள காய்கள் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதத்தில் முற்றி விடுகின்றன.

அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள இலவம் மரங்களில் முற்றிய காய்களை பறிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை.

தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை என, பல இடங்களில் வளர்ந்துள்ள இலவம் மரங்களில் காய்த்துள்ள இலவம் காய்களை பறிக்காததால், அவை, காய்ந்து வெடித்து பஞ்சுகள் காற்றில் பறப்பது வாடிக்கையாக உள்ளது. இதனால் அவ்வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

ஆண்டுதோறும் கோடை காலத்தில் இந்த நிலை நீடித்து வருகிறது. சாலையோர இலவம் மரங்களில் காய்க்கும் காய்களை உரிய நேரத்தில் அறுவடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருங்கிணைந்த முறையில் ஏலம் விட்டால் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.

தொழிலாளர் துறை அலுவலகத்தில் இருந்த இலவம் பஞ்சு மரத்தில் காய்கள் முற்றிய நிலையில் பறந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியது. கோரிமேடு தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து அகற்றினர்.








      Dinamalar
      Follow us