sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியில் கனமழையால் பாதித்தவர்களுக்கு உணவு

/

புதுச்சேரியில் கனமழையால் பாதித்தவர்களுக்கு உணவு

புதுச்சேரியில் கனமழையால் பாதித்தவர்களுக்கு உணவு

புதுச்சேரியில் கனமழையால் பாதித்தவர்களுக்கு உணவு


ADDED : டிச 01, 2024 04:30 AM

Google News

ADDED : டிச 01, 2024 04:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட 46 ஆயிரம் பேருக்கு மதிய உணவாக சாம்பார் சாதம் வழங்கப்பட்டது.

பெஞ்சல் புயல் காரணமாக நேற்று காலை முதல் புதுச்சேரியில் கனமழை பெய்தது. இதனால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை நேற்று பாதிக்கப்பட்டது.

அதையொட்டி புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை சார்பில், புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி, மற்றும் பாகூர், வில்லியனுார் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட 46 ஆயிரம் பேருக்கு லாஸ்பேட்டை அட்சய பாத்திரம் உணவு கூடத்தில் சாம்பார் சாதம் தயார் செய்து நேற்று மதியம் வழங்கப்பட்டது.

முன்னதாக உணவு தயார் செய்யும் கூடத்திற்கு வந்த கலெக்டர் குலோத்துங்கன் உணவு தரம் குறித்து ருசி பார்த்து ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது குடிமை பொருள் வழங்கல் துறை துணை இயக்குநர் தயாளன், அட்சய பாத்திரம் அரசு தொடர்பு அலுவலர் ஜூலியன் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us