sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

என்.ஆர்.காங்., அரசு எந்த நேரத்திலும் கவிழும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆருடம்

/

என்.ஆர்.காங்., அரசு எந்த நேரத்திலும் கவிழும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆருடம்

என்.ஆர்.காங்., அரசு எந்த நேரத்திலும் கவிழும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆருடம்

என்.ஆர்.காங்., அரசு எந்த நேரத்திலும் கவிழும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆருடம்


ADDED : டிச 20, 2024 04:03 AM

Google News

ADDED : டிச 20, 2024 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: என்.ஆர்.காங்., அரசு எந்த நேரத்திலும் கவிழும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

இது குறித்து அவர், கூறியதாவது:

புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் அளித்துள்ளனர். பலர் இத்தொகையை பெற முடியவில்லை. விவசாயிகள், மீனவர்கள், வீடு பாதித்தோருக்கு அரசு இதுவரை நிவாரணம் தரவில்லை.

முதல்வர் ரங்கசாமி டில்லி சென்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வெள்ள நிவாரணம் பெற்றிருக்க வேண்டும்.

லாட்டரி வியாபாரிகள் புதுச்சேரிக்குள் நிவாரணம் வழங்குவதுபோல அரசியலுக்குள் நுழைய பார்க்கின்றனர். அமலாக்க துறை, வருமான வரித் துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், புதுச்சேரியில் முதல்வர் சரியாக செயல்படவில்லை; அதனால் அரசியலில் நுழைகிறோம் என்கின்றனர்.

புதுச்சேரியில் லாட்டரியை கொண்டுவரவும், அரசு நிலங்களை அபகரிக்கவும் திட்டமிடுகின்றனர். இவர்கள் பொருளாதார குற்றம் செய்தவர்கள். இதை புதுச்சேரி மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நான் சுட்டுப்போட்டாலும் காங்கிரசை விட்டு செல்லமாட்டேன். சமூக பொருளாதார குற்றவாளியை காங்கிரஸ் சேர்க்காது. முதல்வர் ரங்கசாமிக்கு ஆதரவாக 13 எம்.எல்.ஏ.,க்கள் தான் உள்ளனர்.

மற்றவர்கள் வெளியே உள்ளனர்.என்.ஆர்.காங்., ஆட்சி ஆட்டம் கண்டுவிட்டது. இந்த மைனாரிட்டி அரசு, எத்தருணத்திலும் கவிழும் நிலை உருவாகியுள்ளது.

புதுச்சேரி புதிய பஸ்நிலையம், குமரகுருப்பள்ளம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகளில் ஊழல் நடந்துள்ளது. 2026ல் காங்., தலைமையில் ஆட்சி வந்த பிறகு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் மீதுநடவடிக்கை எடுப்போம். புதுச்சேரி அரசு ஊழல் தொடர்பாக ஜனாதிபதிக்கு புகார் அனுப்பி விசாரணை நடத்த கோருவோம். சபாநாயகர், பா.ஜ., எம்.எல்.ஏ.,வாக செயல்படுகிறார். அவர் சபாநாயகராக இருக்கவே தகுதி இல்லாதவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us