sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அர சை கண்டித்து போராட்டம் முன்னாள் எம்.எல்.ஏ., அறிவிப்பு

/

அர சை கண்டித்து போராட்டம் முன்னாள் எம்.எல்.ஏ., அறிவிப்பு

அர சை கண்டித்து போராட்டம் முன்னாள் எம்.எல்.ஏ., அறிவிப்பு

அர சை கண்டித்து போராட்டம் முன்னாள் எம்.எல்.ஏ., அறிவிப்பு


ADDED : பிப் 04, 2025 05:56 AM

Google News

ADDED : பிப் 04, 2025 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அதிக மின் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என, முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: மாநிலத்தில், மின் கட்டணம் சராசரியாக யூனிட்டுக்கு 7 முதல் 9 ரூபாய் வரை வசூல் செய்யும் துறையாக மின் துறை உள்ளது. இந்தியாவிலேயே சர்சார்ஜ் உள்பட பல்வேறு விதவிதமான கட்டணம் வசூல் செய்வது புதுச்சேரியில் மட்டுமே.

மாதந்தோறும் மின்கட்டணம் என்ற பெயரில் இந்த அரசு ஏமாற்றி வருகிறது.

இந்த அரசு, இலவசம் என்ற பெயரில் 10 கிலோ, 20 கிலோ அரிசி கொடுத்துவிட்டு, அதைவிட அதிக தொகையை வரி என்ற பெயரில் மக்களிடமே வசூல் செய்து, ஏமாற்றுகிறது.

மாதந்தோறும் 500 ரூபாய் அரிசியை கொடுத்துவிட்டு, மக்களிடம் மின் கட்டணம், குப்பை வரி, வீட்டு வரி, பாதாள சாக்கடை வரி, தண்ணீர் வரி என்ற பெயரில், பல ஆயிரம் ரூபாடய மறைமுகமாக அரசு வசூல் செய்வதை கண்டித்து, மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும்.

அதிக மின் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, மக்களை ஒன்றிணைத்து விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us