/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கருவுற்ற தாய்மார்களுக்கு நிதி வழங்கல்
/
கருவுற்ற தாய்மார்களுக்கு நிதி வழங்கல்
ADDED : பிப் 17, 2025 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்; ஆதி திராவிடர் நலத்துறை மூலம், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த கருவுற்ற தாய்மார்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி கரியமாணிக்கம் அரசு மாணவர் விடுதி வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் ராஜவேலு, கருவுற்ற தாய்மார்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 65 பயனாளிகளுக்கு, ரூ. 18 ஆயிரம் வீதம், ரூ. 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கான நிதியினை வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை ஆய்வாளர் ஏழுமலை, ஊழியர் அரவிந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

