தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விநாயகர் சிலைகள் விஜர்சனம் : நாளை போக்குவரத்து மாற்றம் புதுச்சேரியில் நாளை போக்குவரத்து மாற்றம்

விநாயகர் சிலைகள் விஜர்சனம் : நாளை போக்குவரத்து மாற்றம் புதுச்சேரியில் நாளை போக்குவரத்து மாற்றம்

விநாயகர் சிலைகள் விஜர்சனம் : நாளை போக்குவரத்து மாற்றம் புதுச்சேரியில் நாளை போக்குவரத்து மாற்றம்


ADDED : ஆக 30, 2025 07:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2025 07:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் நாளை விநாயகர் சிலைகள் விஜர்சனம் நடைபெறுவதையொட்டி, நகரப் பகுதியில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து எஸ்.பி., ரச்சனா சிங் செய்திக்குறிப்பு:

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27ம் தேதி கொண்டாடப்பட்டது. அதையொட்டி, புதுச்சேரி முழுதும் பல இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், நாளை 31ம் தேதி மதியம், ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் விஜர்சனம் செய்யப்படவுள்ளது.

ஊர்வலம், நாளை மதியம் 12:00 மணிக்கு, சாரம் அவ்வை திடலில் இருந்து துவங்குகிறது. அதனையொட்டி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக நகரப் பகுதியில் தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, காலாப்பட்டு மார்க்கத்தில் இருந்து பஸ் நிலையத்திற்கு வரும் டவுன் பஸ்கள், கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோவில் சந்திப்பில் இருந்து சிவாஜி சிலை நோக்கி சென்று, கொக்கு பார்க், ராஜிவ், இந்திரா சதுக்கம், நெல்லித்தோப்பு வழியாக பஸ் நிலையம் செல்ல வேண்டும்.

அதேபோல், பஸ் நிலையத்தில் இருந்து புஸ்சி வீதி, ஆம்பூர் சாலை, முத்தியால்பேட்டை வழியாக காலாப்பட்டு செல்லும் பஸ் உள்ளிட்ட கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் வெங்கட சுப்பா ரெட்டியார் சதுக்கத்தில் வலது பக்கம் திரும்பி மறைமலையடிகள் சாலை வழியாக இந்திரா, ராஜிவ் சதுக்கம் வழியாக காலாப்பட்டு செல்ல வேண்டும்.

காமராஜ் சாலையில் லெனின் வீதியிலிருந்து ராஜா தியேட்டர் வரை மதியம் 12:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது. விநாயகர் சிலை ஊர்வலமானது நேருவீதியை கடக்கும் வரை அண்ணா சாலையில் மதியம் 3:00 மணி முதல் போக்குவரத்து தடை செய்யப்படும்.

விநாயர் சிலை ஊர்வலத்தின் போது நேரு வீதி, காந்தி வீதி மற்றும் எஸ்.வி.பட்டேல் சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

சாரம் அவ்வை திடலில், முத்தியால்பேட்டை மற்றும் நெல்லித்தொப்பு மார்க்கங்களில் இருந்து ஊர்வலமாக வரும் விநாயகர் சிலைகள், ராஜா தியேட்டர் சந்திப்பை வந்தடைய வேண்டும். அங்கிருந்து அனைத்து சிலைகளும், ஒரே ஊர்வலமாக நேரு வீதி, மகாத்மா காந்தி வீதி வழியாக அஜந்தா சிக்னல் அடைந்து, எஸ்.வி.பட்டேல் சாலை வழியாக கடற்கரை சாலைக்கு செல்லும்.

ஆகையால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட சாலைகளை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us