/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல்மைரா கடற்கரையில் கழிவு மூட்டைகள் அகற்றம்
/
பல்மைரா கடற்கரையில் கழிவு மூட்டைகள் அகற்றம்
ADDED : பிப் 27, 2026 05:04 AM

பாகூர்: மணப்பட்டு - மூ.புதுக்குப்பம் பல்மைரா கடற்கரையில் கிடந்த கழிவு பொருள் மூட்டைகள், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.
கிருமாம்பாக்கம் அடுத்த மணப்பட்டு - மூ. புதுக்குப்பத்தில் பல்மைரா கடற்கரை உள்ளது. இந்த கடற்கரை வழியாக நேற்று காலை அப்பகுதி மீனவர்கள் சென்றுனர். அப்போது, கடற்கரை நீர்பரப்பு அருகே 10க்கும் மேற்பட்ட கழிவு பொருள் மூட்டைகள் கிடந்துள்ளது.
அருகில் சென்று பார்த்தபோது, அதிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. சாக்கு மூட்டைகளில் இருந்த கழிவு பொருட்கள் வெளியே சிதறிய நிலையில், கடற்கரைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் முகம் சுளித்து வந்தனர்.
இதனால், கடற்கரை பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது.
தகவலறிந்த பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, கழிவு பொருட்களை அகற்றிட நடவடிக்கை மேற்கொண்டனர். அங்கு, கிடந்த கழிவு பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டது.

