/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னர், முதல்வருடன் ஜெர்மன் துாதர் சந்திப்பு
/
கவர்னர், முதல்வருடன் ஜெர்மன் துாதர் சந்திப்பு
ADDED : நவ 22, 2025 06:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கவர்னர் மற்றும் முதல்வரை, ஜெர்மன் நாட்டு துணைத் துாதர் சந்தித்து பேசினார்.
புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள, இந்திய நாட்டிற்கான ஜெர்மன் நாட்டின் துணைத் துாதர் மைக்கேல் ஹஸ்பர், நேற்று ராஜ்நிவாஸ் சென்று, கவர்னர் கைலாஷ்நாதனை மரியாதை நிமித்தமாக சந்திந்து பேசினார்.
அப்போது, ஜெர்மனி மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
பின்னர், அவர் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

