sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்

/

அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்

அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்

அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்


ADDED : ஆக 04, 2025 01:00 PM

Google News

ADDED : ஆக 04, 2025 01:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் டவர் மீது ஏறி டிரைவர், கண்டக்டர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் ஆர்.பி., நகரை சேர்ந்தவர் பாலசுந்தரம், 45; அரசு பஸ் கண்டக்டர். இவரும், விழுப்புரம் வழுதரெட்டியை சேர்ந்த டிரைவர் குபேர், 50; ஆகிய இருவரும் கடந்த, 28ம் தேதி குண்டலபுலியூர் செல்லும் அரசு பஸ்சில் பணியில் இருந்தனர்.

அப்போது பயணிகளுடன் பஸ்சை நிறுத்திவிட்டு, அசோகபுரி அருகே டீக்கடையில் டீ குடித்தனர். இதனால் இருவருக்கும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் 'மெமோ' கொடுத்து, சங்கராபுரத்திற்கு இடமாற்றம் செய்தனர். இதைக்கண்டித்து, பாலசுந்தரம், குபேர் ஆகியோர் நேற்று காலை 10:00 மணியளவில் தங்கள் உடலில் டீசல் ஊற்றிக்கொண்டு விழுப்புரம், 2வது அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் 'டவர்' மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

விழுப்புரம் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து இருவரும் டவரில் இருந்து கீழே இறங்கினர். பின், போலீசார் அறிவுரையை ஏற்று இருவரும் அங்கிருந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us