/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடியரசு தின விழா கவர்னர், முதல்வர் வாழ்த்து
/
குடியரசு தின விழா கவர்னர், முதல்வர் வாழ்த்து
ADDED : ஜன 26, 2026 04:21 AM
புதுச்சேரி: குடியரசு தினவிழாவையொட்டி, கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கவர்னர் கைலாஷ்நாதன் வாழ்த்து செய்தியில், 'சுதந்திரம் அடைந்த நுாறாவது ஆண்டில், 2047ல் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை நோக்கி நாம் பயணித்து கொண்டு இருக்கும். அதே வேளையில் அனைவரும் ஒற்றுமையோடு, செயல்பட்டு, பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்க பாடுபடுவோம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ரங்கசாமி வாழ்த்து செய்தியில், மிகப்பெரிய ஜனநாயக நாடாக நாம் நிமிர்ந்து நிற்கிறோம். நாட்டிற்காக அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபட்ட வீரர்ககள் மற்றும் அரசியலமைப்பை வடிவமைத்த தலைவர்களின் தியாகங்களை இத்தருணத்தில் நன்றியுடன் நினைவு கூர வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்' என, தெரிவித்துள்ளார்.
மேலும், சபாநாயகர் செல்வம் துணை சபாநாய கர் ராஜவேலு, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், திருமுருகன், ஜான்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா, காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., செல்வகணபதி எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு கழக மாநில செயலா ளர் ஓம்சக்தி சேகர், இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ் ஆகியோரும் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

