sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தொழில்நுட்பத்தை பாரம்பரியத்துடன் கலக்க வேண்டும் கவர்னர் கைலாஷ்நாதன் அறிவுரை

/

தொழில்நுட்பத்தை பாரம்பரியத்துடன் கலக்க வேண்டும் கவர்னர் கைலாஷ்நாதன் அறிவுரை

தொழில்நுட்பத்தை பாரம்பரியத்துடன் கலக்க வேண்டும் கவர்னர் கைலாஷ்நாதன் அறிவுரை

தொழில்நுட்பத்தை பாரம்பரியத்துடன் கலக்க வேண்டும் கவர்னர் கைலாஷ்நாதன் அறிவுரை


ADDED : ஜூன் 18, 2025 04:49 AM

Google News

ADDED : ஜூன் 18, 2025 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: எதிர்கால உலகம் வித்தியாசமாக சிந்திப்பவர்களுக்கு சொந்தமானது என கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்ற விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது:

இந்தியா ஒரு வல்லரசு. ஏனெனில் அதன் மக்கள் தொகையில் 65 சதவீதம் இளைஞர்களைக் கொண்டுள்ளது. உலகம் இந்தியாவை கருத்துக்கள், தொழில்நுட்பம், அமைதி மற்றும் முன்னேற்றத்தில் ஒரு தலைவராகப் பார்க்கிறது.இந்த உலகளாவிய லட்சியத்தை அறிவூட்டப்பட்ட இளைஞர்களால் மட்டுமே அடைய முடியும்.

பிரதமர் மோடி சரியாகவே கூறினார், யுவா சக்திதான் விக்சித் பாரதத்தின் உந்துசக்தி என்றார்.இன்றைய இளைஞர்கள் வேலை தேடுபவர்கள் மட்டுமல்ல. அவர்கள் வேலை உருவாக்குபவர்கள். மாற்றத்தை உருவாக்குபவர்கள். தேசத்தை உருவாக்குபவர்கள். கல்வி என்பது வெறும் பட்டங்கள் பெறுவது மட்டுமல்ல. அது அதிகாரம் அளித்தல், விமர்சன சிந்தனை மற்றும் சமூகப் பொறுப்புணர்வினை உள்ளடக்கியது.

21ம் நூற்றாண்டின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, திறன் அடிப்படையிலான கல்வியை மேம்படுத்துவதில் புதுச்சேரி பல்கலைக்கழகம் முன்னிலை வகிக்கும் என்று நான் நம்புகிறேன். தேசிய கல்விக் கொள்கையின்படி நாம் பண்டைய ஞானத்தை நவீன அறிவுடன் ஒருங்கிணைக்க வேண்டும். தொழில்நுட்பத்தை பாரம்பரியத்துடன் கலக்க வேண்டும்.

உலகம் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவுக்கு எதிராகப் போராடும் வேளையில், அறிவு மையங்கள் ஆற்றல், கழிவு மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு மாதிரிகளில் நிலையான தீர்வுகளை வழங்குவதில் முன்னிலை வகிக்க வேண்டும். நாம் டிஜிட்டல் இந்தியாவின் சகாப்தத்தில் வாழ்கிறோம். இந்த புரட்சியில் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் முன்னணியில் இருக்க வேண்டும்.

இந்திய அரசு ஸ்டார்ட்-அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா மற்றும் ஸ்கில் இந்தியா போன்ற பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தளங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

துணை ஜனாதிபதி சாதாரண பின்னணியில் இருந்து நாட்டின் இரண்டாவது உயர்ந்த அரசியலமைப்பு பதவியை அடைந்த அவரது பயணம் நமது இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகம் அளிக்க கூடியது. 2047 ல் நமது சுதந்திரத்தின் 100 வது ஆண்டைக் கொண்டாடும் நேரத்தில், நாம் முழுமையாக வளர்ந்த நாடாக மாற வேண்டும்.

இவ்வாறு கவர்னர் பேசினார்.






      Dinamalar
      Follow us