நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: கரிக்கலாம்பாக்கம் அருகே வீட்டில் இருந்து சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கரிக்கலாம்பாக்கம் சுப்ரீம் கார்டனை சேர்ந்த முருகன் மகள் சுபாஷினி,22; இவர் இளங்கலை பட்டப் படிப்பு முடித்துவிட்டு புதுச்சேரி அண்ணா நகரில் உள்ள தனியார் கம்ப்பூட்டர் சென்டரில் வேலை செய்துவருகிறார்.
இந்நிலையில் கடந்த 12ம் தேதி மதியம் தோழி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்ட சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப் பதிந்து மாயமான இளம்பெண்னை தேடி வருகின்றனர்.

