நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: செம்படப்பேட்டை அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நேற்று முன்தினம் கனபதி ஹோமத்துடன் துவங்கியது.
நெட்டப்பாக்கம் அடுத்த செம்படப்பேட்டை அங்காளம்மன் கோவில் மாயனாக்கொள்ளை விழா நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அன்று இரவு 7 மணிக்கு கரகம் எடுத்து ஜலம் திரட்டி, காப்பு கட்டி, கொடியேற்றப்பட்டது.
விழாவையொட்டி, தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகளும், இரவு 7 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. வரும் 16ம் தேதி இரவு 7.00 மணிக்கு வள்ளாள கண்டன் கோட்டை அழித்தல் நிகழ்ச்சியும், முக்கிய நிகழ்ச்சியான மாயானக் கொள்ளை விழா 17ம் தேதி மதியம் 1.00 மணிக்கு நடக்கிறது. 18 ம் தேதி காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

