நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; பெத்து செட்டிப்பேட்டையில் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் புஷ்பலிங்கம் மற்றும் போலீசார் பெத்து செட்டிப்பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
பெத்துசெட்டிப்பேட்டை, பூஞ்சோலை அம்மன் கோவில் வீதியை சேர்ந்த செல்வராஜ், 59 ; என்பவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, செல்வராஜ் மீது வழக்குப் பதிந்த போலீசார், கடையில் இருந்த ரூ. 1,200 மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.