ADDED : பிப் 14, 2025 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஏனாமில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில், போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். ஏனாம் பைபாஸ் சாலையில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த, அதே பகுதியை சேர்ந்த கொல்லபள்ளி ரவி நாகபாபு, 38, என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின் அவரிடம் இருந்த குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

