ADDED : ஜூலை 14, 2025 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : குட்கா பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
சேதராப்பட்டு போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசு பள்ளி அருகில் உள்ள கடையில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கிருந்த கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது சேதராப்பட்டு மெயின்ரோட்டைச் சேர்ந்த சுதாகர் சாஹூ 55, என்பவரது கடையில் குட்கா பொருட்கள் விற்றது தெரியவந்தது.
இதையடுத்து கடையில் இருந்த குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

