ADDED : நவ 26, 2025 07:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பெட்டிக்கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி ரங்கபிள்ளை தெருவில் குட்கா விற்பதாக பெரியகடை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார், அந்த பகுதியில் இருந்த பெட்டிக்கடையில் சோதனை செய்தனர்.
கடையில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்ததை போலீசார் கண்டறிந்தனர். கடையில் இருந்து 1000 ரூபாய் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் லாஸ்பேட்டை, சேர்ந்த தியாகராஜனை, 45; கைது செய்தனர்.

